Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Rajnath singh

“தன் பெயரில் காந்தி என்ற பெயரைக் கொண்ட ஒருவரிடமிருந்து இத்தகைய வெட்கக்கேடான அறிக்கை…” பிரதமர் மோடி குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்களுக்கு ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்தார்.

பிரதமர் மோடி மற்றும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கருத்துக்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

”ராகுல் காந்தியின் கருத்துக்கள் மிகவும் தரம் தாழ்ந்தவை. கண்டிக்கத்தக்கவை மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. எனது நீண்ட அரசியல் வாழ்க்கையில், சுஷ்மா ஸ்வராஜ் அல்லது அருண் ஜேட்லி, அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் அத்வானி, அல்லது அடல் பிஹாரி வாஜ்பாய் அரசில் இருந்த டாக்டர் மன்மோகன் சிங் அல்லது சோனியா காந்தி என எந்தவொரு எதிர்க்கட்சித் தலைவரும் இத்தகைய கண்ணியமற்ற முறையில் நடந்து கொண்டதை தான் கண்டதில்லை.

இத்தகைய நடத்தை இந்தியாவில் ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு கடுமையான அச்சுறுத்தலைக் குறிக்கிறது. பிரதமர் மோடி மீது ராகுல் காந்திக்கு எவ்வளவுதான் அதிருப்தி இருந்தாலும், இதுபோன்ற தரக்குறைவான கருத்துக்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. குறிப்பாக, சர்வதேச அளவில் இந்தியாவின் கௌரவத்தை உயர்த்தி, வளர்ந்த இந்தியாவிற்கு வழிவகுத்த பிரதமரான நரேந்திர மோடி போன்ற ஒரு தலைவருக்கு எதிரான இதுபோன்ற தரக்குறைவான கருத்துக்கள் ஒவ்வொரு இந்தியருக்கும் ஆழ்ந்த வேதனையைத் தருகின்றன” என ராஜ்நாத் சிங் கூறி வேதனை தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  17 வயது சிறுமியை சீரழித்த மத்திய அமைச்சரின் மகன்..! ரூ.5 கோடிக்காக நடந்த ஹனிட்ராப்..?

ராகுலால் இந்தியாவின் சர்வதேச நற்பெயருக்கு அவமானம்
சமூக ஊடக தளமான எக்ஸ் பதிவில் அவர், “நான் காங்கிரஸ் கட்சியையும் கேட்க விரும்புகிறேன். இதுபோன்ற மொழி, நடத்தைக்குப் பிறகு, லால், பால் முதல் காந்திஜி, நேருஜி, சர்தார் படேல், சுபாஷ் பாபு, ராஜேந்திர பாபு முதல் சாஸ்திரிஜி, நரசிம்ம ராவ் முதல் பிரணாப் முகர்ஜி வரையிலான மாபெரும் ஆளுமைகளின் பாரம்பரியத்தை அவர்களால் இப்போது உரிமை கோர முடியுமா?

இன்றைய இந்த நடத்தையின் மூலம், ராகுல் காந்தி பிரதமர் மோடியை அவமதித்தது மட்டுமல்லாமல், இந்தியாவின் சர்வதேச நற்பெயரையும் அவமதித்துள்ளார். ஜனநாயகத்தின் கண்ணியத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற தனது பதவியையும் களங்கப்படுத்தியுள்ளார் என்று என்னால் கூற முடியும். தன் பெயருக்கு முன்னால் காந்தி என்ற வார்த்தையைக் கொண்ட ஒருவர் இத்தகைய வெட்கக்கேடான அறிக்கையை வெளியிட முடியும் என்பதை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

ராகுலை தாக்கிய ஏக்நாத் ஷிண்டே
மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக் கொள்கையை கேலி செய்ததற்காக ராகுல் காந்தியை கடுமையாக சாடியுள்ளார். ”நாட்டின் முன்னேற்றத்தை எதிர்க்கட்சிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய நற்பெயர், பொருளாதார முன்னேற்றம் குறித்து எதிர்க்கட்சிகள் பெருமைப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதையும் படியுங்க  அமமுக கூண்டோடு கலைப்பா..? சிக்கலில் டிடிவி தினகரன்..! பாஜக வைத்த 'செக்'..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago