திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடி ஏரியில் ரூ.8 கோடிக்கு மேல் மதிப்பிலான மண் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதாகவும், இயற்கை வளக் கொள்ளை மற்றும் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டி, அமைச்சர் எ.வ. வேலு, அவரது மகன் எ.வ. குமரன் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறையில் அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது.
அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த மலப்பம்பாடி ஏரி மண்னை சொரண்டி திமுக வடமண்டல இளைஞரணி மாநாட்டுக்கு பயன்படுத்தி உள்ளார் மாஜி அமைச்சர் எ.வ. வேலு
இவர் , கடந்த 2025 /டிசம்பர் 14-ஆம் தேதி நடைபெற்ற திமுக மாநாட்டுக்காக, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சுமார் 124 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுத் திடல் அமைக்கும் பணிக்காக ஏரி மண்ணை அள்ளி நிரப்பி இருக்கிறார்

இந்த நிலம் வேலுவின் மகன் எ.வ. குமரனின் ‘அருணை புராடக்ட்ஸ் அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்துக்குச் சொந்தமானது
மாநாட்டை நடத்துவதற்காக நிலத்தைச் சமன்படுத்தும் பணியில், அருகில் உள்ள மலப்பம்பாடி ஏரியில் இருந்து, சர்வே எண் 58-ல் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் 10 முதல் 23 அடி, அதாவது சுமார் 3 முதல் 7 மீட்டர் ஆழத்திற்கு மண் சட்டவிரோதமாகத் தோண்டி எடுக்கப்பட்டதாக அறப்போர் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
தமிழ்நாடு சிறு கனிமச் சலுகை விதிகள், 1959-ன் விதி 12(2)-ன்படி, பொதுப் பயன்பாட்டிற்காக ஏரிகளில் இருந்து மண் எடுப்பதற்கு ஒரு மீட்டருக்கு மேல் அனுமதி வழங்க சட்டத்தில் இடமில்லை
ஆனால், செல்வாக்கைப் பயன்படுத்தி, சுமார் 45 லட்சம் கன அடி மண் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.8 கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்படுத்தியிருக்கிறார்
இதனால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்புடன், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து ஏரியை நேரடியாக ஆய்வு செய்தபோது இதனைத் தெரிந்துகொண்டதாகவும் அறப்போர் இயக்கம் கூறியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, மாநாட்டிற்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக மலப்பம்பாடி ஏரிக்கரையில் சாலை எ.வ. வேலுவின் குடும்பத்திற்குச் சொந்தமான நிலத்தின் நுழைவாயில் வரை நெடுஞ்சாலைத் துறை மூலம் சட்டவிரோதமாக சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது, இது தமிழ்நாடு பாசனக் குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம், 2007-க்கு எதிரானது
இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக பொதுமக்களும் விவசாயிகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை இதையடுத்து, உழவர் உரிமை இயக்கம் சார்பில் 2025 நவம்பர் 25ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அப்போதைய ஆட்சியர், வட்டாட்சியர், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை .மாறாக எ.வ. வேலு மற்றும் அவரது மகன் சட்டவிரோதமாக மண் எடுக்கவும், அதன் மூலம் சொத்து சேர்க்கவும் அதிகாரிகள் வழி வகுத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

ரூ.46 கோடிக்கு 124 ஏக்கர் நிலம் வாங்கியதாக புகார்
மாநாட்டை சாக்காக வைத்து 124.56 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம், கடந்த 2024 ஜூன் 12-ஆம் தேதி ரூ.46 கோடிக்கு ‘அருணை புராடக்ட்ஸ் அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ளது இந்த நிறுவனத்தின் இயக்குநராக எ.வ. குமரன் இருந்து வருகிறார்.
இந்த நிலத்தை விற்பனை செய்த ‘ரிஷி என்டர்பிரைசஸ்’ நிறுவனம், நெடுஞ்சாலைத் துறையில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களைப் பெற்று வரும் ஒப்பந்ததாரர் பாண்டித்துரையின் நிறுவனமாகும் அந்த நிறுவனம் பாண்டித்துரை மனைவியின் பெயரில் உள்ளது
எ.வ. வேலுவுடன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தியபோது, ‘ரிஷி என்டர்பிரைசஸ்’ நிறுவனத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு பல கோடி ரூபாய் கணக்கில் வராத பணத்தை அமலாக்கத்துறை கைப்பற்றப்பட்டதாகவும் அறப்போர் இயக்கம் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளது.

ஒரு சென்ட் நிலம் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் நிலையில், 124 ஏக்கர் நிலம் வெறும் ரூ.46 கோடிக்கு எவ்வாறு விற்பனை செய்யப்பட்டது குறித்தும்
குறிப்பாக, அப்போது நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த எ.வ. வேலுவின் மகன், நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரருடன் தொடர்புடைய நிறுவனத்திடம் இருந்து இந்த நிலத்தை வாங்கியிருப்பது தொடர்பான பணப் பரிவர்த்தனைகள் மற்றும் அதன் பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்திட வேண்டும்
எப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரிக்கை
இந்த விவகாரத்தில் மாஜி அமைச்சர் எ.வ. வேலு, எ.வ.வே.குமரன் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச் சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா, கனிம வளங்கள் தொடர்பான சட்டங்கள் உள்ளிட்ட பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.
மேலும், இந்த விவகாரம் குறித்து நியாயமான மற்றும் முழுமையான விசாரணை நடத்தி, சட்டவிரோதமாக மண் அள்ளிய அனைவரின் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசுக்கு ஏற்பட்ட இழப்பை சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏரி வளங்கள் பாதுகாக்கப்பட வலியுறுத்தல்
மண் கொள்ளையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும்

மலப்பம்பாடி ஏரியில் நடைபெற்றதாகக் கூறப்படும் மண் அகழ்வு காரணமாக அப்பகுதியின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதில் ஏரியின் இயற்கைத் தன்மை மீண்டும் திரும்ப முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது
இப்படி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து, விவசாய நிலங்களையும் இயற்கை வளங்களையும் சிலர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர் இவர்களுக்கு அதிகாரிகள் சிலர் உடந்தையாகச் செயல்பட்டுள்ளார்கள்
அரசு சொத்துகளை மோசடி செய்வது, திருடுவது அல்லது சேதப்படுத்துவது போன்ற செயல்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டங்கள் இருக்கின்றன அரசுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வகையில் அபராதம் மற்றும் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் .
மலப்பம்பாடி ஏரியில் நடைபெற்றதாகக் கூறப்படும் மண் அகழ்வு, நிலப் பரிவர்த்தனை மற்றும் அதனுடன் தொடர்புடைய அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பதே அறப்போர் இயக்கத்தின் முக்கியக் கோரிக்கையாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினரின் விளக்கமும், அதிகாரப்பூர்வ விசாரணையின் முடிவுகளும் வெளியாகும்போதுதான் புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை முழுமையாகத் தெரியவரும்.
