இறுதியாக… தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டில் புதிய அரசை அமைப்பதற்குத் தயாராகி வருகிறது. சென்னை, பெரியமேட்டில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில், ஞாயிறு அல்லது திங்கட்கிழமையன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு, தவெக தலைவர் விஜய்க்கு ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து ஆளுநர் மாளிகைக்கு கிளம்பிச் சென்றார் விஜய். விழா நடைபெறும் இடத்தில் அதற்கான ஏற்பாடுகளை மாநிலப் பொதுப்பணித் துறை மீண்டும் தொடங்கியுள்ளது.
தவெக 107 இடங்களைக் கைப்பற்றியதுடன், காங்கிரஸ் 5, சிபிஐ 2, சிபிஐ (M) 2, IUML 2 மற்றும் விசிக -2 ஆகிய கட்சிகளின் ஆதரவையும் பெற்றது. இதன் மூலம் இந்தக் கூட்டணியின் பலம் 120 சட்டமன்ற உறுப்பினர்களாக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், திருச்சி கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விஜய் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது; அதேவேளையில், சாத்தூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், சட்டமன்றத்தில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் விலகி இருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விளைவாக, அவையின் மொத்த பலம் 234-லிருந்து 232-ஆகக் குறைவதால், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களின் எண்ணிக்கை 117-ஆகக் குறைகிறது. தவெக கூட்டணி தற்போது 120 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.
