நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார். இன்று திருச்சி ஜோசப் கல்லூரியில் வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்ல கூட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அவர்களுக்கு தனியாக செய்தி காட்சிகள் லிங்க் மூலமாக வழங்கப்படும் எனவே பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் இருக்கும் இடத்திற்கு செய்தியாளர்கள் அனுமதி இல்லை என தெரிவித்துள்ளனர். இதுவரை தமிழகத்திலே எத்தனையோ முதல்வர்கள் தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர் அத்தனை நிகழ்ச்சியிலும் செய்தியாக பங்கேற்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அவர்களை உரிய மரியாதை உடன் அழைத்துச் செல்வது வழக்கம்.
ஆனால் புதிதாக முதலமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் விஜய் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு செய்தியாகளுக்கு எந்த விதமான அனுமதி அடையாள அட்டையும் வழங்கப்படவில்லை மேலும் அங்கு சென்ற செய்தியாளர்களுக்கு உள்ளே செல்வதற்கான அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதிருச்சியில் உள்ள செய்தியாளர்களை அவமானப்படுத்தும் நிகழ்வாக உள்ளது என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
-ஜான் கண்ணன்- சிறப்பு நிருபர், திருச்சி
