Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித் துறையில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

26 நாட்கள் நீடித்த இந்தப் போராட்டத்தை அவர் முடித்துக் கொண்டதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்ட வீடியோ பதிவுகள் மற்றும் அவரைப் பற்றிய பல பதிவுகள் தற்போது மிக வேகமாக வைரலாகி வருகின்றன.

உண்ணாவிரதத்தை முடித்த பிறகு, தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்ட வீடியோவில் சோனம் வாங்சுக் உணர்ச்சிபூர்வமாகப் பேசியுள்ளார்.


“மாணவர்களுக்காக 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததால் என் உடல் எடை 11 கிலோ குறைந்துள்ளது. தசை நார்கள் சுருங்கி, மூளை மற்றும் உள் உறுப்புகள் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் நிலைக்கு சென்றுவிட்டேன். லடாக்கின் உறைபனியிலும், டெல்லியின் சுட்டெரிக்கும் வெயிலிலும் மாணவர்களுக்காகப் போராடிய எனக்கு, யாராவது ‘கேரக்டர் சர்டிபிகேட்’ வழங்க வேண்டுமா?” என்று தன்னை விமர்சிப்பவர்களிடம் ஆதங்கத்துடனும் வேதனையுடனும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படியுங்க  காதல் கோட்டை போல தொடங்கிய கதை… கொள்ளையுடன் முடிந்த அதிர்ச்சி!

இதற்கிடையில், டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சோனம் வாங்சுக், அங்கிருந்து வெளியேற முயன்றபோது போலீசார் தடுத்ததாகக் கூறப்படும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

அந்த வீடியோவில் அவர்,
“நான் ஒரு சுதந்திரக் குடிமகன். சட்டப்படி எந்த உத்தரவும் இல்லாமல் என்னை ஏன் தடுத்து வைக்கிறீர்கள்? என்னை முறைப்படி கைது செய்யுங்கள் அல்லது வெளியே செல்ல அனுமதியுங்கள். இந்த மன உளைச்சலால் எனக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு நீங்களே பொறுப்பு,” என்று போலீசாரிடம் வாதிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்த பிறகு, எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு மூன்று முக்கிய எழுத்துப்பூர்வமான உறுதிமொழிகள் பெறப்பட்டதையடுத்து தான் போராட்டத்தை முடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Republic Tamil
  • நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும்.
  • தேர்வு முறைகேடுகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.
  • ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.
இதையும் படியுங்க  உண்மை உடைந்தது.. பேரதிர்ச்சியில் இந்தியா! நீட் மறுதேர்விலும் பயோமெட்ரிக் மோசடி அம்பலம்!

மேலும், “இது உண்ணாவிரதத்தின் முடிவு மட்டுமே; அதிகாரிகளின் பொறுப்புக்கூறலின் தொடக்கம்” (End of Hunger – Beginning of Accountability) என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சமூக வலைதளமான எக்ஸ் (X)-இல் பயனர் ஒருவர்,
“இமயமலையில் பள்ளிகளைக் கட்டி, விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படாமல் இருக்க செயற்கை பனிப்பாறைகளை உருவாக்கி, சர்வதேச விருதுகளை வென்ற ஒருவர், நாட்டின் மாணவர்களுக்காக தனது உயிரையே பணயம் வைத்து உண்ணாவிரதம் இருக்கிறார். இவர் நிஜமாகவே ‘முட்டாள்’ தான்!” என்று நையாண்டி (Sarcasm) வடிவில் பதிவிட்ட கருத்து ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டு வருகிறது.

Republic Tamil

அதேபோல், 2023ஆம் ஆண்டு கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சோனம் வாங்சுக் நேரில் சந்தித்துப் பேசியபோது எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்களையும் தற்போது நெட்டிசன்கள் மீண்டும் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

இதனிடையே, தனது போராட்டம் குறித்து சோனம் வாங்சுக் வெளியிட்ட மற்றொரு பதிவில், “இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி” என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சார்பில் ஜூன் 20ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்தப் போராட்டம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது. அதன் தொடர்ச்சியாக, ஜூன் 28ஆம் தேதி முதல் சோனம் வாங்சுக் 26 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். பின்னர் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக மாறியதால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

இதையும் படியுங்க  ஈரான் போர் கொடுத்த சவுக்கடி..! அம்பலமான இந்தியாவின் பலவீனம்..! அலர்ட் ஆன பிரதமர் மோடி..!

தலைநகரில் 35 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த இளைஞர் போராட்டத்தின் பின்னணியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறப்படும் தகவல்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இதுகுறித்து சோனம் வாங்சுக் வெளியிட்ட பதிவில்,

Republic Tamil

“இது ஜனநாயகத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அமைதி, பொறுமை மற்றும் விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இளைஞர்களுக்கு எனது வாழ்த்துகள். வீதிகளில் இருந்து நேரடியாக போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் வெற்றியைப் பெற்றுள்ளனர். அச்சத்தை மீறி நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் போராடிய மக்களுக்கு நன்றி. தவறுகளுக்குப் பொறுப்பேற்பதிலிருந்து, இனி சீர்திருத்தங்களை நோக்கி நாம் நகர வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago