‘பெத்தி’ (Peddi) திரைப்படத்தில் நடிகை ஜான்வி கபூர் கவர்ச்சியாக சித்தரிக்கப்பட்ட விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகை நித்யா மேனன் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
பாக்ஸ் ஆபீஸ் வெற்றிக்காகவும் புகழுக்காகவும் நடிகைகள் தங்களது கொள்கைகளையும் தனிப்பட்ட எல்லைகளையும் மீறக் கூடாது என்று நித்யா மேனன் வலியுறுத்தியுள்ளார்.
சில வகையான திரைப்படங்களில் நடிக்க மறுப்பதால் பெரிய பட வாய்ப்புகள் கைநழுவிச் சென்றிருந்தாலும், அதைப் பற்றி கவலைப்படாமல் புகழை விட தன்மானத்தையே தான் தேர்வு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சினிமாவில் பெண்கள் ஒரு போகப் பொருளாக (Objectification) சித்தரிக்கப்படுவது தற்போது ஒரு வணிகப் போக்காக மாறிவிட்டதாக அவர் கூறினார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, நடிகைகள் தங்களது பயணத்தின் ஆரம்பத்திலிருந்தே தெளிவான எல்லைகளையும் கொள்கைகளையும் வகுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
திரைப்படத் துறையில் நீண்ட காலம் நிலைத்து நிற்க குறுக்கு வழிகளை நாடாமல், திறமை, பொறுமை மற்றும் கடின உழைப்பை மட்டுமே நம்ப வேண்டும் என்று இளம் நடிகைகளுக்கு நித்யா மேனன் அறிவுரை வழங்கியுள்ளார்.
