Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு, தனது 88-வது பிறந்தநாளான இன்று (ஜூலை 25), அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக (அரசியல் துறவறம்) அறிவித்துள்ளார். அவரது இந்த திடீர் மற்றும் உணர்வுபூர்வமான அறிவிப்பு, விழாவில் பங்கேற்ற பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள கோனேரிக்குப்பம் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற அவரது 88-வது பிறந்தநாள் விழாவில், தனது மகனும் பாமக தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாசுடன் ஒரே காரில் வந்து கலந்துகொண்டார். விழாவில் உரையாற்றிய அவர், தனது அரசியல் வாழ்வின் முக்கியமான முடிவை அறிவித்தார்.

“இன்று முதல் நான் அரசியல் துறவறம் பூணுகிறேன். இனி நான் அரசியல் பேச மாட்டேன். பாமகவின் அரசியல் விவகாரங்களிலும் தலையிட மாட்டேன். என்னைச் சந்திக்க வருபவர்கள் நலம் விசாரிக்கலாம். ஆனால் அரசியல் குறித்து என்னிடம் பேச வேண்டாம். இன்று முதல் நான் அரசியலில் இருந்து முழுமையாக விலகுகிறேன்.” என்றார்.

இதையும் படியுங்க  “இடைத்தேர்தலில் CM Vijay-க்கு எதிராக மக்கள் வாக்களிப்பார்கள்” – அன்புமணி எச்சரிக்கை

மேலும், கட்சியின் எதிர்கால அரசியல் முடிவுகள், வியூகங்கள் மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் அனைத்தையும் இனி பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு கவனித்துக் கொள்வார் என்றும், அவருக்கு துணையாக அவரது மனைவி சௌமியா அன்புமணி இருப்பார் என்றும் தெரிவித்தார்.

தனது உடல்நிலை குறித்தும் பேசிய மருத்துவர் இராமதாசு, கடந்த சில நாட்களாக தலைச்சுற்றல் (Vertigo) பாதிப்பால் அவதிப்பட்டு, சுமார் 20 நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகக் கூறினார்.

“இன்னும் தலைச்சுற்றல் முழுமையாக குணமாகவில்லை. இருந்தாலும் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவலால் தான் இங்கு வந்தேன். உங்களுக்கும் எனக்கும் உள்ள தொப்புள்கொடி உறவு என்றும் மாறாது. உங்களின் அன்பும் வாழ்த்துகளும் எப்போதும் எனக்கு துணையாக இருக்கும்.” என்று அவர் உருக்கமாகப் பேசினார்.

சரஸ்வதி கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியை நினைவுகூர்ந்த அவர், “இந்த கல்வி வளாகம் உருவாக சரஸ்வதி அம்மையார் மிகுந்த பாடுபட்டார். பின்னர் நானும், பலரும் இணைந்து உழைத்ததன் பலனாக இன்று இது மிகப்பெரிய கல்வி வளாகமாக வளர்ந்துள்ளது. இந்த கல்விக் கோயில் மேலும் வளர அனைவரும் பாடுபட வேண்டும். அதுவே நீங்கள் எனக்குச் செய்யும் மிகப்பெரிய காணிக்கையாக இருக்கும்.” என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படியுங்க  விஜயை மிரட்டும் திருமா..! விசிக-வை சமாளிக்க பாமக-வுக்கு வலை… கோட்டையை உலுக்கும் குதிரை பேரம்..!

மேலும், கல்வி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக உழைத்த பேராசிரியர்கள், தாளாளர், பொறியாளர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.

Republic Tamil

கடந்த 2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில், பாமக தலைமையுரிமை, கட்சிச் சின்னம் உள்ளிட்ட விவகாரங்களில் மருத்துவர் இராமதாசு மற்றும் மருத்துவர் அன்புமணி இராமதாசு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்தன. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில், அண்மையில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் அன்புமணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை மருத்துவர் இராமதாசு திரும்பப் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து, இருவரும் தைலாபுரம் இல்லத்தில் சந்தித்து தங்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகளை முடிவுக்குக் கொண்டு வந்தனர். இந்தச் சமரசத்தைத் தொடர்ந்து, மருத்துவர் இராமதாசு அரசியல் துறவறம் அறிவித்திருப்பது, பாமக வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

அதேநேரம், கட்சியின் முழு அரசியல் பொறுப்பையும் மருத்துவர் அன்புமணி இராமதாசுவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்திருப்பது, அவரது தனித்துவமான தலைமைத்துவத்தின் புதிய அத்தியாயமாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago