Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

‘ராமாயணா’ திரைப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சாய் பல்லவி, அந்த தெய்வீகக் கதாபாத்திரத்தின் உணர்வை முழுமையாக வெளிப்படுத்துவதற்காக தினமும் தியானம் செய்ததாக மனம் திறந்து பகிர்ந்துள்ளார். இதற்கிடையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்து தியானத்தில் ஈடுபட்ட அவரது பக்தி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தில், சீதை கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்து வருகிறார். இந்திய இதிகாசங்களில் மிகவும் புனிதமான மற்றும் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் கதாபாத்திரங்களில் ஒன்றான சீதையின் குணநலன்களையும், ஆன்மிக ஆழத்தையும் தனது நடிப்பில் இயல்பாகக் கொண்டு வருவதற்காக, படப்பிடிப்பு நாட்கள் முழுவதும் தினமும் தியானம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Republic Tamil

ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய சாய் பல்லவி, படப்பிடிப்பின் போது ஒவ்வொரு முக்கியமான காட்சிக்கும் முன்பாக சில நிமிடங்கள் அமைதியாகத் தியானத்தில் அமர்ந்துவிடுவேன் என்று கூறினார்.

அப்போது தனது மனதில், “சீதா மா… நீங்களே என் வழியாகச் செயல்படுங்கள். என் மூலம் வெளிப்படும் ஒவ்வொரு உணர்வும், ஒவ்வொரு நடிப்பும் உங்களின் விருப்பமாக இருக்கட்டும்” என்று மனதாரப் பிரார்த்தனை செய்து தியானித்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

இதையும் படியுங்க  தோனியை நினைவூட்டிய அஜித்… இணையத்தில் தெறிக்கும் ‘தல ரிட்டர்ன்ஸ்’

மேலும், இத்தகைய தெய்வீகமான கதாபாத்திரத்தை மக்கள் மிகுந்த பக்தியுடனும் மரியாதையுடனும் பார்க்கிறார்கள் என்பதால், படப்பிடிப்பு நடைபெற்ற நாட்கள் முழுவதும் தனது மனதைத் தூய்மையாகவும், அமைதியாகவும், நேர்மறை எண்ணங்களுடனும் வைத்திருக்க தியானம் தனக்கு மிகவும் உதவியதாகவும் அவர் கூறியுள்ளார்.

சாய் பல்லவி மற்றும் நடிகர் நாக சைதன்யா இணைந்து நடித்த ‘தண்டேல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற, சிவபெருமானைப் போற்றும் “ஓம் நமோ நமச்சிவாய” (Namo Namah Shivaya) என்ற ஆன்மிகப் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Republic Tamil

இந்நிலையில், இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. முதல் பாகம் தீபாவளி 2026-இலும், இரண்டாம் பாகம் தீபாவளி 2027-இலும் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் பிரம்மாண்ட திரைப்படத்தில், ஸ்ரீ ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக நடிகர் யாஷ், ஹனுமனாக சன்னி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதற்கிடையில், நடிகை சாய் பல்லவி இன்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

இதையும் படியுங்க  "சும்மா பாராட்டாதீங்க, எனக்கு சினிமா வாய்ப்பு கொடுங்க!" - மேடையில் அழுதுகொண்டே பேசிய வடிவுக்கரசி!

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் அடிக்கடி வருகை தந்து அண்ணாமலையாரை வழிபட்டு வருகின்றனர்.

தற்போது நடிகர் தனுஷ் நடித்து வரும் ‘ஓம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்று மாலை நடிகை சாய் பல்லவி திருவண்ணாமலைக்கு வந்திருந்தார்.

Republic Tamil

அதைத் தொடர்ந்து, இன்று காலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வந்த அவர், சுவாமி தரிசனம் செய்த பின்னர் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் அமைதியாகத் தியானத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து, கோவிலின் கொடிமரத்தைத் தொட்டு வணங்கிய அவர், தீப மலையையும் தரிசனம் செய்து பக்தி பரவசத்துடன் வழிபாடு மேற்கொண்டார்.

பின்னர், அண்ணாமலையார் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கோவில் ஊழியர்கள் மற்றும் அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பலரும் நடிகை சாய் பல்லவியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இதையும் படியுங்க  "தமிழ்நாட்டின் அசுரனும், கேரளாவின் சிங்கமும் நேருக்கு நேர்! Screen-ல நெருப்பு பறக்கப்போகுது!

சீதையின் கதாபாத்திரத்திற்காக ஆன்மிகப் பயிற்சியாகத் தியானத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் சாய் பல்லவி, அதேபோன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலிலும் பக்தியுடன் தியானத்தில் ஈடுபட்ட சம்பவம், பக்தர்களிடையிலும் திரைப்பட ரசிகர்களிடையிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago